Special Notice – கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சை – கல்வியாண்டு 2024/2025
Published On 27/05/2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
அறிவித்தல்
சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்றுகை மற்றும் கட்புலக் கலைகள் பீடம்
சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி
நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி
கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சை
கல்வியாண்டு 2024/2025
மேற்குறிப்பிட்ட பரீட்சைகளின் ஒழுங்கமைக்கப்பட்ட திகதிகளில் தங்களுக்கு வேறு பல்கலைக்கழகத்தின் உளச்சார்பு பரீட்சை ஒழுந்கமைக்கப்பட்டிருக்கும் பரீட்சார்த்திகளுக்காக பின்வரும் தினங்களில் பரீட்சைகளை விசேடமாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி – 06.06.2025 காலை 09.00 மணி
- நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி – 07.06.2025 காலை 09.00 மணி
மேற்குறித்த தினங்களில் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவதற்காக மாணவர்கள் பின்வரும் ஆவணங்களைத் தவறாது சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.
- பரீட்சார்த்தியின் அனுமதி அட்டை
- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் பரீட்சை ஒழுங்கமைக்கப்பட்ட அதே திகதியில் இன்னொரு பல்கலைக்கழகத்தால் பரீட்சை ஒழுங்கமைக்கப்ட்டமையால் குறித்த திகதியில் பரீட்சைக்கு தோற்றமுடியாமையை உறுதிப்படுத்துவதற்காக அப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட அனுமதி அட்டையின் பிரதி.
பதிவாளர்