Notices

மாணவர்களுக்கான அறிவித்தல் – அன்னலட்சுமி அம்பலவாணர் தொண்டு நிதி – AACF நிதி

மாணவர்களுக்கான அறிவித்தல்

அன்னலட்சுமி அம்பலவாணர் தொண்டு நிதி – AACF நிதி

யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களிடமிருந்து மேற்படி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பின்வரும் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்:

யாழ் பல்கலைக்கழகத்தில் இல் பதிவுசெய்யப்பட்ட 1ம் வருட மாணவர்கள் ஐவருக்கு பத்து மாதங்களுக்கு மாதம் 5,000/- உதவித்தொகை வழங்கப்படும்.

நிதியுதவி பெறுபவர்கள்:

  • இலங்கை தமிழ்
  • குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்கள்

இசைத் துறை, நடனத் துறை, விஞ்ஞானபீடம், பொறியியல் பீடம் மற்றும் சித்த மருத்துவப் பிரிவு  ஒவ்வொன்றில் இருந்தும்,  ஒரு மாணவருக்கு நிதியுதவி வழங்கப்படும் .

விண்ணப்பப் படிவங்கள் நல சேவைகள் கிளையில் கிடைக்கும். விண்ணப்பப் படிவங்களை பல்கலைகழக இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 26.03.2024 அன்று அல்லது அதற்கு முன் நலச்சேவைகள் கிளைக்கு கிடைக்கப்பெறுதல் வேண்டும்.

முழுமையடையாத விண்ணப்பங்கள் மற்றும் இறுதித் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

உதவிப் பதிவாளர்/
நலச்சேவைகள் கிளை