Events

நினைவுப் பேருரை – மறைந்த நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மறைந்த நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த நான்காவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேருரையும் 21.12.2023 வியாழக்கிழமை பி.ப.2.00 மணியளவில் நூலக கேட்போர் கூடத்தில் பதில் நூலகர் கலாநிதி. திருமதி க.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நினைவுப் பேருரையினை யாழ் பல்கலைக்கழக தகைசார்வேந்தர் பேராசிரியர். சி.பத்மநாதன் அவர்கள் ‘தமிழ்ப் பிராமி வழியாக வெளிவரும் இலங்கைத் தமிழரின் புராதன வரலாறு’ எனுந் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். தங்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.